வியாழன், 20 மார்ச், 2025

ஜீவநாடி என்றால் என்ன?

 ஜீவநாடி என்றால் என்ன?



“ஆதி என்னும் அசுதினாபுரம் கேளப்பா சொல்லுவேன்

இப்பாரதத்து பெருநகர் ஆங்கென் ஒளர் விரிசலும்

காலவழி தன்னிலே குறுக்கிடலும் விதியாகும்

வலுவிழர்ந்தார்ப் போல வாட்டமது கொண்டார்ப் போல

நின்றிடினும் கூட்டமது காண ஒளர்வழி

உலகுக்கு ஒளிஒத்து உத்தமர்க்குப் பெரும்பலன்

ஏற்றிய விளக்கொளி என்று ஞானியரும் ஜீவமுக்தரும்

யோகியரும் சித்தாதிப் பெருமுனியொரும் விண்டுரைதவாறு

தவஒளியாலே ஒளர்பலன் துல்லியமாய் எழுந்துபேச

துரிதத்தினால் துரியாதீதம் கடந்துமறு கண்ணும் ஒளர்வழிகண்டு

வையகத்தார்க்கு உறவென்னும் ஒளர்நிலை பதவி உகந்தேகூட்டவே

பாரதத்தின் பெருமைஒளி பருலகோர்க்குக் கண்ணொளியும்

நிறைபலம் காணச்செய்யும் விதியது இனியாகுமப்பா!


- காகபுஜண்டர் ஜீவநாடி


நாடியில் குறிப்பிட தகுந்த உயர்வான ஒன்று ஜீவநாடி ஆகும். இதுஒரு அதிசயநாடி என்றும் அற்புதநாடி என்றும் கூறினாலும் மிகையில்லை. ஜீவன் என்றால் உயிர், ஜீவநாடி என்றால் உயிர்நாடி என பொருள்படும், ஜீவிதம் என்றால் மனித வாழ்க்கை ஆகும். எனவே மனித வாழ்வில் தோன்றும் சிக்கல்களுக்கு, என்று கேட்கும் நேரத்தில் உயிர்பெற்று பலன் சொல்வதால் அத்தகைய ஓலைச்சுவடிகளை ஜீவநாடி போற்றுகிறோம். அவ்வாறு மனித வாழ்வில் முன் பிறவிகளில் செய்த கர்ம வினை பதிவுகளால் இந்த பிறவியில் நமக்கு வரும் கர்மவினையால் நாம் அடையும் துன்பங்கள் தீரவும் வழிகாட்டும் விதமாக சித்தர்களும், மகாமுனிவர்களும் இத்தகைய ஜீவநாடி ஓலைச்சுவடிகளை இயற்றினர்.


சித்தர்கள் மற்றும் மகரிஷிகளின் ஜீவநாடி என்பது அரூபமாக நாடி படிப்பவரின் கண்களுக்கு ஒளிரும் மஞ்சள் நிறமுடைய எழுத்துக்களாய் தோன்றி பலன் கேட்பவரின் வினைபதிவினையும் அதனால் உண்டாகும் நல்ல மற்றும் தீய பலன்களையும், அவர்களுக்கு நேரும் துன்பங்களை போக்க செய்யவேண்டிய பரிகாரங்கள், பூஜைகள் மற்றும் செய்யவேண்டிய முறை முதலியவற்றை தெளிவாக பாடல்கள் வாயிலாக ஜீவநாடி படிப்பவர்க்கு உணர்த்தும். ஜீவநாடி படிப்பவர் படிப்பை நாம் எழுதிவைத்துக்கொண்டோ அல்லது ஒலிநாடாவில் பதிவு செய்துகொண்டோ பின்னர் பாடல்களுக்கு விளக்கத்தினை அவரிடம் கேட்டு அறிந்துகொள்ளலாம்.

ஜீவநாடியை எல்லோரும் படித்து பலன் சொல்ல இயலாது, இறைஅருளும், சம்மந்தப்பட்ட சித்தர் மகரிஷிகளின் ஆசியும் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு ஜீவநாடி உயிர்பெற்று பலன் சொல்லும், மற்றவர் கண்களுக்கு சாதாரண ஓலைச்சுவடியாகவே காணப்படும்.


இந்த உலக வாழ்வில் ஆன்மீகவழியில் நடந்தால் மட்டுமே நன்மைகள் பெறமுடியும், சித்தர்களின் சக்திகள் என்பது நாம் அறிந்த ஒரு விசயமாகும். இன்றைய விஞ்ஞானிகளுக்கு புரியாத பல விசயங்களை பலகோடி ஆண்டுகளுக்கு முன்பே கணக்கிட்டு சொன்னவர்கள் சித்தர்கள். 


இறைவனோடு இரண்டற கலந்தவர்கள் சித்தர்கள். இத்தகைய சித்தர்களால் சாதிக்கமுடியாத விஷயம் ஏதும்இல்லை. இத்தகைய சித்தர்கள் எழுதிய ஜீவநாடி உலகமக்களுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷமாகும்.இத்தகைய ஜீவநாடி சுவடிகள் அரிதாகவே உள்ளன. அத்தகைய ஜீவநாடி சென்னையில் மறைந்த ஜோதிட பெருமகனார் திரு.ஹனுமன்தாசன் அவர்களிடம் இருந்தது. அதன் மூலம் பயனடைந்தோர் பலர், அவர் வாசித்த சுவடி அகத்தியர் ஜீவநாடி ஆகும்.மேலும் தஞ்சையில் ஜோதிடர் திரு.கணேசன் அவர்களிடமும் ஒரு ஜீவநாடி சுவடி உள்ளது.

ஜீவநாடி என்பது நம்மை வாழ்விலும், வளத்திலும், ஆன்மீகத்திலும் உயரவைக்கும் உயிர்நாடி ஆகும். நம் வாழ்வின் அனைத்து சிக்கல்களுக்கும் உடனடி தீர்வினை தரும் உயர்நாடி ஜீவநாடி ஆகும். இத்தகைய அபூர்வசக்தி கொண்ட அகத்தியர் சித்தரின் ஜீவநாடி எங்களின் இயக்கி விருட்ச பீடத்திற்கு இறையருளால், சித்தர்கள் அருளாசியால் வந்து சேர்த்தது, பக்தர்களின் குறைதீர ஜீவநாடி படித்து பலன்களை சொல்லிவருகிறோம்.


ஜீவநாடியில் அகத்தியரின் அருள்வாக்கு பெற வரும் அன்பர்கள், தெய்வத்திற்கு மற்றும் சித்தர்களுக்கு பூஜைக்கு உரிய புஷ்பங்கள், தாம்பூலம்(வெற்றிலை&பாக்கு), கனிவகைகள் படைத்து அகத்திய பெருமானிடம் மனமுருகி தனது பிரார்தனைகளை சொல்லி வணங்கி அருள்வாக்கு பெற்று வாழ்வில் வளம்பெறலாம்.


முகவரி : 

"சாக்த முயற்சி" டாக்டர். லட்சுமி தாச சுவாமிகள்,

26/6, கிச்சகத்தியூர்,

இலுப்பபாளையம் (அஞ்சல்),

சிறுமுகை (வழி) - 641302,

மேட்டுப்பாளையம் வட்டம்,

கோயம்புத்தூர் மாவட்டம்.

செல் : 7397290727.

செவ்வாய், 18 மார்ச், 2025

 ஜீவநாடி அற்புதங்கள்....


வைரக்கல் மோதிரத்தால் ஏற்பட்ட விபரீதம்...
"முன் ஜென்ம பாவம் என்று மட்டும் சொல்லி எங்களை பரிகாரம் செய்ய சொல்லாதீர்கள். அப்படி செய்து செய்து அலுத்து போய் விட்டோம். வேறு ஏதாவது சொல்லுங்கள். நாங்கள் செய்கிறோம். எப்படியாவது எங்கள் கஷ்டம் விடிந்தால் போதும்" என்று மிகுந்த வேதனையோடு சொல்லி என் முன்பு அமர்ந்தார் ஒரு நடுத்தர வர்கத்து பெண்!
'அப்படி என்ன கஷ்டம் உங்களுக்கு?'
"நல்ல உத்யோகத்தில் இருந்த என் கணவருக்கு திடீரென்று உத்யோகம் பறிபோயிற்று. இரண்டாவது நன்றாக படித்துக் கொண்டிருந்த என் பையன் ஏதோ பித்து பிடித்த மாதிரி வீட்டிலே உட்கார்ந்து எதையோ வெறித்து வெறித்து பார்த்து தனக்கு தானே சிரித்து கொண்டிருக்கிறான். காலேஜுக்கு போவதே இல்லை.
'அப்புறம் ?'
எனது ஒரே மகள் பவித்ரா, நன்றாக இருந்தாள். புத்திசாலி பெண், வீட்டில் இருந்து வேலைக்கு செல்லமாட்டேன் தனியாக ஹாஸ்டலில் இருந்து தான் வேலைக்கு செல்வேன் என்று சொல்லி வீட்டை விட்டு தனியாக சென்று விட்டாள். நான் பித்து பிடித்த மாதிரி இருக்கிறேன். எங்களுக்குண்டான சொத்து, தோட்டம், வீடு எல்லாம் திடீரென்று ஏற்பட்ட கடனுக்காக குறைந்த விலைக்கு விற்க வேண்டியதாயிற்று. அப்படியிருந்தும் இன்னும் கடன் அடையவில்லை என்று மூச்சு விடாமல் சொல்லி, கொதித்து கொதித்து அழுதாள்.
பார்க்க பரிதாபமாக இருந்தது, கேட்கவும் சங்கடமாக இருந்தது.
'என் வினை தீர இதுவரையிலும் கடன் வாங்கியே பல லட்சம் ஜோதிடத்திற்காக, பரிகாரத்திற்காகச் செலவழித்து விட்டேன். இனிமேல் என்னிடம் விற்பதற்கு ஒன்றுமே இல்லை' என்றாள்.
'கணவருக்கு எப்படி வேலை போயிற்று?'
'யாரோ செய்த தவறு இவர் மீது பழியாக விழுந்தது பணம் கையாடினார் என்று சொல்லி வேலையை விட்டு நீக்கி விட்டார்கள். இதுதான் எங்கள் குடும்பத்தில் விழுந்த முதல் அடி'.
'உங்கள் பையனுக்கு என்ன ஆயிற்று?'
'காலேஜுக்கு போயிட்டு வந்தான், அவ்வளவு தான் தெரியும், மறுநாள் முதல் அவன் காலேஜுக்கு போகவே இல்லை. பைத்தியம் போல் தனக்கு தானே பேசிக்கொண்டான். சாப்பிடுவதும் இல்லை, குளிக்கவும் மாட்டான், போட்ட துணியை மாற்றவும் இல்லை, எதை கேட்டாலும் பதில் சொல்ல மாட்டான். எவ்வளவோ வைத்தியம் பண்ணி பார்த்தேன். நாளையோடு எட்டு மாசம் ஆக போகிறது அவன் காலேஜூக்கு போய், அவனுக்கு என்ன வந்தது, ஏன் எங்களுக்கு இந்த கஷ்டம்? என்று மீண்டும் அழுதாள். சிறிது நேரம் பொறுமையாக இருந்தேன்.
'என் பொண்ணு கை நிறைய சம்பாதிக்கிறா, அவளை வச்சு தான் என் குடும்பம் ஓடிக்கொண்டு இருக்கிறது. கூட இருந்து குடும்ப பொறுப்பை ஏற்பாள் என்று எண்ணினேன். ஆனால் அவளோ, இந்த வீட்டில் இருந்தால் நிம்மதியே இல்லை என்று தனியாக போய் ஆறு மாதம் ஆகிறது. என் குடும்பத்திற்கு யாராவது ஏதாவது பில்லி சூனியம் வச்சிருக்காங்களா? என்றார் அந்த பெண்மணி.
இந்த அம்மாள் சொன்னதை வைத்து பார்க்கும் பொழுது இது மாந்திரீகம் என்று கூட எனக்கு தோன்றியது. பதினைந்து நிமிடம் அகத்தியரை நோக்கி பலமாக பிரார்த்தனை செய்தேன். பிறகு நாடியை புரட்டினேன்.
'சட்டென்று கிளம்பட்டும் இவள் தன் வீடு நோக்கி, இரு நாட்கள் கழித்து காலையில் அகத்தியரை வந்து பார்க்கட்டும்' என்று தான் மாறி மாறி வந்ததே தவிர வேறு புதிய செய்திகள் எதுவும் என் கண்ணில் தென்படவே இல்லை.
'அம்மா உங்களுக்கு இன்றைக்கு அகத்தியர் வாக்கு எதுவும் வரவில்லை. ஆனால் காலதாமதம் செய்யாமல் உடனே வீட்டுக்கு கிளம்ப சொல்கிறார். இரண்டு நாட்கள் கழித்து வாருங்கள் அகத்தியர் நிச்சயம் பதில் தருவார். என்று அவளை கிழப்ப முயன்றேன்.
ஆனால் அவளோ நகரவே மறுத்தாள். வீட்டிலே போய் நான் என்ன செய்ய போகிறேன். இங்கேயே எத்தனை நேரமானாலும் இருந்து'நாடி' பார்த்து விட்டு தான் செல்வேன் என்று அடம் பிடித்தாள்.
'அகத்தியர் சொன்னால் அதற்கு என்னவோ ஓர் காரணம் இருக்கும். தயவுசெய்து வீட்டுக்கு கிஹம்புங்கள், வேறு எங்கேயும் செல்லாமல் நேராக வீட்டிற்கே செல்லுங்கள்' என்று மிகவும் கட்டாயப்படுத்தினேன்.இது எனக்கே சங்கடமாக தான் இருந்தது.
'ஆனால் அந்த பெண்ணோ வாய்க்கு வந்தபடி பேசினார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
அகத்தியர் மீது தான் எனக்கு கோபம் வந்தது. எனக்கெதற்கு இந்த வீண் பழி. எதற்காக இந்த கேவலமான பேச்சு என்று மனம் நொந்து போனேன்.
அந்த பெண்மணி மிகுந்த வருத்தத்தோடும் கோபத்தோடும் போனது மட்டும் எல்லோரும் பார்த்த உண்மை. இதற்கு பிறகு என்னை பார்க்க வந்திருந்த மற்றவர்களுக்கு நாடி படிக்க மனதே இல்லை.
நன்கு மணி நேரம் கழிந்தது.
அந்த பெண்மணியிடம் இருந்து எனக்கு டெலிபோன் வந்தது! நேரில் திட்டியது இல்லாமல் டெலிபோனில் வேறு திட்டப் போகிறாள் போலும் என எண்ணிக் கொண்டே டெலிபோனை கையில் எடுத்தேன்.
ஐயா, என்னை மன்னிச்சிடுங்க தெரியாதனமா உங்களையும் திட்டினேன், அகத்தியரையும் திட்டினேன். நல்ல வேளை நான் உடனே வீட்டுக்கு போகவில்லை என்றால், தூக்க மாத்திரை சாப்பிட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த என் மகனை காப்பாற்ற முடியாமல் போயிருக்கும். இதற்கு நான் அகத்தியருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றாள்.
அவளது பேச்சிலிருந்து அவள் மிகப்பெரிய அதிர்சியிலிருந்து தப்பிய சந்தோஷம் இருப்பதை அறிந்து கொண்டேன்.
'பையன் ஏதோ விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தோடு தூக்க மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு மயங்கி கிடப்பதை அகத்தியர் அறிந்து, அவனது உயிரை காப்பாற்ற அவனது தாயை உடனடியாக அனுப்பி இருக்கிறார், இருந்தாலும் அவன் நல்லபடியாக குணமாக டாக்டர்கள் 48 மணிநேரம் ஆகும் என்றதால், இரண்டு நாட்கள் கழித்து பையனை அழைத்து கொண்டு வருவதாக அந்த அம்மணி சொல்ல நான் அறிந்து கொண்டேன்.
அகத்தியருக்கு நானும் தனிப்பட்ட முறையில் நன்றியை சொல்லி கொண்டேன். மூன்று நாள் கழிந்தது.
அந்த பெண்மணி தன் பையனோடு மறுபடியும் என்னை பார்க்க வந்தாள். காலில் விழுந்து அவளது மகன் ஆசீர்வாதம் பெற்றான்.எதற்காக இந்த கஷ்ட காலம் அது எப்போது நிவர்த்தியாகும் என்பதை மட்டும் அகத்தியர் சொன்னால் போதும் அதற்காக என்ன பிரார்த்தனை வேண்டுமானாலும் செய்ய தயார் என்றாள் அந்த பெண். அகத்தியர் இடம் அனுமதி கேட்டு படிக்க ஆரம்பித்தேன்.
'அவளது கணவர் லஞ்சம் வாங்கியே பழக்கப்பட்டு போனவர். அவருக்கு ஒரு நாளாவது ஒரு ரூபாயாவது லஞ்சம் வாங்கவில்லை என்றால் வீட்டுக்கு திரும்ப மனமே வராது. இவ்வளவுக்கும் மிகப்பெரிய கம்பெனியில் அன்றைக்கு எந்த லஞ்சமும் கிடைக்கவில்லை என்றால் அலுவலகத்தில் உள்ள எதையாவது ஒரு பொருளை, குறைந்த பட்சம் குண்டூசி பேக்கெட்டையாவது எடுத்து சட்டை பைக்குள் போட்டுக் கொள்வார். அப்படிப்பட்ட மனிதருக்கு ஒரு முக்கியமான நபர் முக்கியமான காரியத்தை முடித்து கொடுக்க விலை உயர்ந்த 'நீல கல்லை' வைரம் பதித்த ஒரு மோதிரத்தை அன்பளிப்பாக கொடுத்தார்.
சாதாரண குண்டூசியையே விடாமல் கொண்டு வரும் அந்த மனிதனுக்கு 'புளூ ஜாகர்' வைர மோதிரம் கிடைத்தால் விட்டு விடுவாரா? சந்தோஷத்துடன் வாங்கி தன் கால் சட்டைக்குள் மறைத்துக் கொண்டார். அந்த 'புளூ ஜாகர் வைரம்' எவ்வளவு கொடுமையான பலன் தரும் என்பதை அவர் அறியவில்லை, அறிந்திருந்தால் அதனை கொடுத்தவர் இடமே திருப்பி கொடுத்திருப்பார். அல்லது தூர எறிந்திருப்பார். அந்த வைர மோதிரத்தை எப்போது கையை நீட்டி வாங்கினாரோ, அந்த நிமிடத்திலிருந்து அவருக்கு கெட்ட காலம் ஆரம்பித்து விட்டது.
அஅந்த வைர மோதிரம் கொடுத்த நபருக்காக தவறான முயற்சியில் இறங்கி மாட்டிக் கொண்டார். பதவி பறிபோயிற்று. அப்பொழுதாவது அவர் யோசித்திருக்க வேண்டும். எதற்காக இந்த பதவி போயிற்று என்று. யோசிக்கவில்லை, விதியும் அவரை யோசிக்க விடவில்லை.
வீட்டில் வைத்திருந்த அந்த புளூ ஜாகர் மோதிரத்தை அவரது மகன் ஒரு நாள் அணிந்து கொண்டான். அன்று முதல் அவனுக்கு சட்டென்று புத்தி பேதலித்து விட்டது. பைத்தியம் போல் ஆனான், அதன் உச்ச கட்டம் தான் அவனை தற்கொலைக்கு தூண்டியது.
நன்றாக வசதியாக வாழ்ந்து கொண்டிருந்த இந்த பெண்மணிக்குறிய சொத்து, வீடு, மனை, வாகனம் அத்தனையும் அந்த வைர மோதிரத்தால் பறி போயிற்று. இப்பொழுது அவளது மகளையும் வீட்டில் இருக்க விடாமல் குடும்பத்தை விட்டே வெளியே துரத்தி இருக்கிறது என்று சொன்னார் அகத்தியர், அந்த புளூ ஜாகர் வைர மோதிரத்தை தலையை சுற்றி தூக்கி எறி வாழ்க்கை மீண்டும் வசந்தமாகும் என்றார், இது முன் ஜென்ம கர்மாவா இல்லை இந்த ஜென்மத்தில் செய்த தவறா? என்பதை இந்த பெண்ணே முடிவு செய்து கொள்ளட்டும்.
அகத்தியர் சொன்னது அத்தனையும் உண்மை என்று பின்னர் என்னிடம் வந்த அந்த பெண்மணியும் அவளது கணவனும் ஒப்புக்கொண்டார்கள். பீரோவில் வைக்கப்பட்ட அந்த வைர மோதிரத்தின் விலை 'நான்கு லட்சம்' என்றாலும் அது நாற்பது லட்ச ரூபாய் குடும்ப சொத்தை பாழடித்து விட்டது இப்போது அது எங்கேயோ ஒரு குப்பை மேட்டில் கிடக்கிறது.
ஆ, அந்த மோதிரத்தை தூக்கி எறிந்த பின்னர் வீழ்ந்த அந்த குடும்பம் இன்றைக்கு மீண்டும் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.
நன்றி!
அகத்தியர் மைந்தன் - ஹனுமன்தாசன் ஐயா
குறிப்பு : ஐந்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் அகத்தியரின் அருளாசியல் மாசி மகம் (12.03.2025) முதல் ஜீவநாடி படிக்க துவங்கியுள்ளோம். முகவரி : ''பண்டிட்" லக்ஷ்மி தாச சுவாமிகள், 26/6, ஸ்ரீ விருட்ச பீடம், கிச்சகதியூர், இலுப்பபாளையம் அஞ்சல், சிறுமுகை - 641302, மேட்டுப்பாளையம் வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம். செல் : 07397 290 727

 ஜீவநாடி அற்புதங்கள்....2..


''ஆவி'' விரட்ட அகத்தியர் சொன்ன பரிகாரம் ....

'நன்றாக இருந்த பையன், இப்போ பித்து பிடித்த மாதிரி ஆகிவிட்டான். என்ன நடந்தது என்று தெரியவில்லை. இவன் குணம் ஆவானா மாட்டானா?' என்று 22 வயது மகனை அழைத்து வந்து என்னிடம் கேட்டாள் அவனது தாய்.

பையனை பார்த்தேன், சாதாரணமாகத்தான் இருந்தான். அவன் தாய் சொல்கிற அளவுக்கு எந்தவித பாதிப்புக்கும் ஆளானதாக தெரியவில்லை.

'என்ன நடந்தது?'

'ஒன்றுமில்லை, ஒன்றரை வருஷத்திற்கு முன்பு சேத்துப்பட்டு பலத்திலே ராத்திரி ஒரு மணிக்கு தனியாக வண்டி ஒட்டிக் கொண்டு வந்திருக்கான். பாலத்தை விட்டு இறங்கியதும், எதோ ஜில்லுன்னு ஒடம்புல பட்டிருக்கு அதற்கு பிறகு இவன், இவனாக இல்லை.

'இது எப்படி உங்களுக்கு தெரியும்?'

'அதுவரைக்கும் நடந்ததை இவன் நண்பர்கள் என் கிட்டே சொன்னார்கள். இது உண்மையா, பொய்யா என்று தெரியாது. ஆனால் அதுவரை பிரண்ட்ஸ் கூட சேர்ந்து டிபன் சாப்பிட்டிருக்கான். சினிமாவுக்கும் போயிருக்கான், ஜாலியா அரட்டையும் அடிச்சிருக்கான்.'

'டாக்டரிடம் கொண்டுபோய் காண்பிச்சிங்களா?'

'கட்டினோம். என்னவெல்லாமோ மருந்து கொடுத்தாங்க, ஒன்னும் குணமாகலே. நீங்க தான் அகத்தியரிடம் அருள்வாக்கு கேட்டு தரணும். 

'அது சரி...நீங்க என்ன நினைக்கிறீங்க?

'யாரோ செய்வினை வச்சுட்ட மாதிரி தெரியுது.'

'எதுக்காக வைக்கணும்?'

'அது தெரியாதுங்க. அக்கம் பக்கத்துலே இருக்கிறவுங்க சொல்றதைத்தான் உங்க கிட்ட சொல்றேன்.'

'சரி இதுக்கு ஏதாவது பரிகாரம் செய்திருப்பீங்களே?'

'சோட்டாணிக்கரை பகவதி கோயிலுக்கு இவனை அழைச்சுட்டு போனோம். 45 நாட்கள் அங்கேயே தங்கி, பூஜை பரிகாரங்களையும் செய்து பார்த்து விட்டோம். எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

இவ்வளவு சொல்லிக் கொண்டிருந்த போது அந்த பையன் மவுனமாகவே இருந்தான். வாய் திறந்து பேசவே இல்லை.

என்னதான் இருக்கும் என்பதை அறிய எனக்கு ஆவல். இருந்தாலும் அதை வெளியில் கட்டிக் கொள்ளாமல் அகத்தியரை வணங்கி, ஜீவநாடியை பிரித்தேன்.

ஜீவநாடியிலிருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை. முதலில் எனக்கு இது அதிர்ச்சியை தந்தது. மறுபடியும் பிரார்த்தனை செய்து கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.

மறுபடியும் எந்த பதிலும் அகத்தியர் சொல்லவே இல்லை. தன்னம்பிக்கையோடு மறுபடியும் மறுபடியும் பிரித்துப் படித்தேன்.

ஒன்பதாவது தடவையாகத்தான் அகத்தியரிடமிருந்து பதில் வந்தது.

'இவனுக்கு பதில் சொல்ல இந்த இடம் ஏற்றதல்ல. செய்வினையை அகத்தியன் நம்பவில்லை என்றாலும், ஒரு துர்தேவதை இவனுக்குள் புகுந்திருப்பதால் அந்த தேவதையோடு அகத்தியன் பேச விரும்பவில்லை. எனவே ஒரு அஷ்டமி தினத்தில் இரவு ஆரம்பிக்கும் நேரத்தில் சென்னை நகரின் பிரசித்திப் பெற்ற தேவாலயத்தில் இது பற்றி விளக்குவோம்' என்றார்.

பிறகு என்னிடம், 'உன்னை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் போட்டுக் கொள். அதற்குரிய மந்திரம் இது'. என்று சொல்லி சில மந்திரங்களை உபதேசித்தார்.

அந்த மந்திரங்கள் இது வரை நான் கேள்விப்படாதது. படிக்க கஷ்டமாகத்தான் இருந்தது. பொறுமையாகவும், நிதானமாகவும் நான் மூன்று தடவை அப்போதே சொல்லி முடித்தேன்.

இந்த மந்திரங்களை சொல்லி முடித்ததும் அதுவரை பொறுமையாக இருந்த அந்தப் பையனின் முகத்தோற்றம் மாறியது. திடீரென்று விழுந்து விழுந்து சிரித்தான்.

அந்த சிரிப்பு அவனுடையதாக இல்லை.பெண்ணின் இனிமையான காதல் சிரிப்பு போல் இருந்தது. ஒரு ஆண் மகனிடமிருந்து திடீரென்று பெண் குரலில் பேச்சு வந்ததால் நான் உட்பட அந்த பையனின் தாயும் சேர்ந்து வெலவெலத்து போனோம்.

என்னதான் எனக்கு அகத்தியர் பாதுகாப்பு மந்திரத்தை சொன்னாலும் திடீரென்று இப்படி அவன் பெண் குரலில் பேசுவான் என்பதை கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை.

அந்த தாய் தன் பையனுடைய இந்த நிலையை கண்டு பொங்கி பொங்கி அழுதாள். தாங்கிக் கொள்ள முடியவில்லை. தொடர்ந்து அவன் ஒரு பெண் போல சிரித்துக் கொண்டிருந்தான்.

நான் அவனை முழுமையாக எடை போட்டேன்.இதற்கு கொஞ்சம் மனதைரியமும் தேவைப்பட்டது. அதோடு அகத்தியர் எனக்கு கொடுத்த அந்த பாதுகாப்பு மந்திரமும் கை கொடுத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அந்த சூழ்நிலையில் அவனோடு நான், என் அறையில் ஒரு நிமிடம் கூட இருந்திருக்க முடியாது.

பத்து நிமிடங்களுக்குப் பின் அந்தப்பையன் லேசாக மயக்கமடைந்து தரையிலேயே படுத்து விட்டான். சிரிப்பும் நின்று விட்டது.

சிறிது நேரத்துக்கு பின்பு அவனது தாயாரிடம் அகத்தியர் சொன்னதை சொல்லி, எதிர்வரும் அஷ்டமி தினத்தன்று மாலை வேளையில் குறிப்பிட்ட அந்த தேவாலயத்திற்கு பையனை அழைத்து வர சொன்னேன்.

அங்கும் இப்போது நடந்தது போல் ஏதேனும் நடந்தாலும் நடக்கலாம் என்று மனதிற்கு தோன்றியதால், மேலும் சில நபர்களோடு தக்க துணையோடு வரும்படி அந்த பையனின் தாயாரிடம் கேட்டுக் கொண்டேன்.

அந்த தேவாலயத்தின் முன்பு அஷ்டமி நேரத்தில் மாலை வேளையில் அகத்தியர் ஜீவநாடியோடு காத்துக்கிடந்தேன். அவர்கள் வரும் வரை அகத்தியர் சொன்ன பாதுகாக்கும் மந்திரத்தையும் சற்று பயத்துடன் சொல்லிக் கொண்டிருந்தேன்.

சற்று நேரத்தில் அந்த பையனும், அவனை சேர்ந்தவர்களும் வந்தார்கள். பையன் முகத்தில் களை இருந்தது. சுறுசுறுப்புக்கூட அபாரமாக இருந்தது. மற்றவர்கள் முகத்தில் மட்டும் சற்று பயம் தெரிந்தது.

என் முன் வந்து அமர்ந்த அவனை மேற்கு பார்த்து உட்கார சொன்ன அகத்தியர், அவனைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

'இவன், ஒரு பெண் மீது காதல் கொண்டிருந்தான். முதலில் இவனது வேண்டுகோளுக்கு செவி சாய்க்காத அந்த பெண் பின் இரட்டிப்பு மடங்கு இவன் மீது ஆசை கொண்டாள். பிறப்பில் அவள் கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்தவள். இருந்தாலும் திருமணம் செய்தால் இவனைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று மனதில் உறுதி பூண்டாள்.

திருமண விஷயமாக அவள் பெற்றோர் முயற்சித்தபோது பெற்றோரிடம் தன் எண்ணத்தை வெளியிட்டாள். வழக்கம் போல் எல்லாப் பெற்றோர்களும் சொல்வது போல் அவளது பெற்றோர்களும் சொன்னார்கள். பெற்றோர் இந்த திருமணத்திற்கு தடைவிதித்தாலும் இதையும் மீறி தான் இந்தப் பையனை துணிந்து மணந்து கொள்ளலாம், என்று நினைத்தாள் அந்த பெண். அதன்படி இவனை தேடி ஓடி வந்திருக்கிறாள்.

ஆனால், இந்தப் பையன் சட்டென்று பேச்சு மாறி இரண்டாண்டுக்கு பின் திருமணம் செய்யலாம் என்று மழுப்பியிருக்கிறான். இதை சற்றும் எதிர்பார்க்காத அவள் சட்டென்று 'சேத்துப்பட்டு (சென்னை) ரெயில் நிலையத்துக்கு வந்து ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள்.

நல்லவேளை அவள் யாரையும் காட்டிக் கொடுக்கவில்லை, கடிதமும் எழுதி வைக்கவில்லை.

தன்னால் தான் அவள் தற்கொலை செய்து கொண்டாள் என்பதை உணர்ந்த இவன், தினமும் நள்ளிரவில் அந்த 'சேத்துப்பட்டு மேம்பாலத்தில் நின்று அவளுக்காக கண்ணீர் சிந்துவது வழக்கம். அந்த பெண்ணும் அவன் நினைப்பிலே இறந்து போனதாலும், இறந்து போன அந்த ஆவி சட்டென்று இவனுக்குள் புகுந்து கொண்டது. ஆகவே அன்று முதல் இன்று வரை இவனை ஆட்டிக் கொண்டிருப்பது அந்த பெண்ணின் ஆவிதான்...

இவ்வாறு ஒரு நீண்ட கதையை சுருக்கமாக சொல்லி முடித்தார் அகத்தியர். இந்த உண்மை அந்தப் பையனின் தாயார் உட்பட அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால் என்னிடம் சொல்லாமல் மறைத்துவிட்டார்கள்.

''இப்போது அவனுள் புகுந்த ஆவியை போக்குவது எப்படி?' என்று கேட்டாள் அவனது தாய். இதற்கு அகத்தியர் விளக்கம் அளித்தார்.

'இது அதர்வண வேதத்தை சேர்ந்த பரிகாரம் தொடர்புடையது. சோட்டாணிக்கரை பகவதி கோவிலுக்கு சென்றிருக்கும் பொழுதே இந்த பரிகாரம் செய்திருக்க வேண்டும். எனினும் இப்பொழுது இந்த தேவாலயத்துக்கு சென்று பாதிரியார் கையில் சிலுவை ஒன்றை ஆசீர்வாதம் பெற்று அதனை இவன் கழுத்தில் அணியட்டும்.

இல்லையென்றால் வேறு எங்கேயாவது சென்று தினமும் பைபிளை முதலிலிருந்து கடைசி வரை இந்த பையனுக்காக மற்றவர்கள் முப்பது நாட்கள் படிக்கட்டும். இல்லையென்றால் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்று பதினெட்டு நாட்கள் பிரார்த்தனை செய்து வரட்டும்.

இறந்த அந்தப் பெண் கிருஸ்துவ மதத்தை சேர்ந்தவளாக இருப்பதால் இதை  செய்ய சொன்னேன். அந்த பெண்ணின் தொந்தரவு இனிமேல் இவனுக்கு இருக்காது. அதற்காகத்தான் உங்களை இந்த புனிதமிகு தேவாலயத்திற்கு வர சொன்னேன். இவ்வாறு அகத்தியர் கூறினார்.

அந்த பையனின் சொந்தக்காரர்களுக்கு அகத்தியர் சொன்னதில் சிறிதும் உடன்பாடில்லை. வேறு மதத்தை சேர்ந்த தாங்கள் பைபிள் படிப்பதா? என்று கடும்கோபம் அடைந்தனர். என்னிடமும் வாக்குவாதம் செய்தனர்.

'ஒன்றே ஒன்று மட்டும் சொல்கிறேன். நான் அகத்தியர் சொன்னதை சொன்னேன். மற்றவை உங்கள் இஷ்டம். நான் எதுவும் வட்புறுத்தவில்லை' என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டேன்.

ஒன்றரை மாதம் கழித்து அந்த பையனும், அவனுடைய தாயும் என்னைத்தேடி வந்தனர்.

அகத்தியர் சொன்னபடியே அத்தனை பிரார்த்தனைகளையும் ஒன்று விடாமல் செய்து விட்டதாகவும், இப்பொழுது அவன் முற்றிலும் நல்லபடியாக மாறி விட்டதாகவும் மகிழ்ச்சியோடு கூறினார்.

 அகத்தியருக்கு நன்றி கூரிய நான், ஒன்றை மட்டும் அவரிடம் மன்றாடி கேட்டுக் கொண்டேன். 'இனிமேல் இப்படிப்பட்ட ஆவி, மதம் விஷயத்தில் என்னை மாட்டி விடாதீர்கள்' என்றேன்.

இது வரை அப்படிப்பட்ட தொந்தரவுகள் வரவில்லை.

நன்றி - ஹனுமன் தாசன் ஐயா...


குறிப்பு : ஐந்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் அகத்தியரின் அருளாசியல் மாசி மகம் (12.03.2025) முதல் ஜீவநாடி படிக்க துவங்கியுள்ளோம். முகவரி : ''பண்டிட்" லக்ஷ்மி தாச சுவாமிகள், 26/6, ஸ்ரீ விருட்ச பீடம், கிச்சகதியூர், இலுப்பபாளையம் அஞ்சல், சிறுமுகை - 641302, மேட்டுப்பாளையம் வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம். செல் : 7397290727.

சனி, 3 ஆகஸ்ட், 2024

பூனையின் தொப்புள் கொடி - தாந்த்ரீகம்

                                           பூனையின் தொப்புள் கொடி - தாந்த்ரீகம்  



ஹிந்தி மொழியில் பில்லி கா ஜெர் (பூனையின் தொப்புள் கொடி) என்றும் ஆங்கிலத்தில் CAT'S CHORD (பூனையின் தொப்புள் கொடி) என்றும் அழைக்கப்படுகிறது.ஹிந்தியில் பில்லி என்றால் பூனை என்று பொருள். பூனை குட்டி போடும் போது தொப்புள்கொடியுடன் ஒரு பை போன்று இருக்கும் அந்த பை உள்ளே தான் முதல் குட்டி இருக்கும் (பூனையின் தொப்புள் கொடி), பூனை பல குட்டிகளை இடும் ஆனால் ஒரேயொரு தொப்புள் கொடியுடன் பை ஒன்று மட்டுமே இருக்கும். "தாத்ரேய தந்திரம்" என்னும் தாந்த்ரீக சாஸ்திரத்தில் பூனையின் தொப்புள் கொடி தாந்த்ரீகத்தின் அற்புதங்களை பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. நமது தமிழ் மக்களிடம் கூட தலைச்சான் குழந்தையின் தொப்புள்கொடி எடுத்து தாயத்தில் அடைத்து தந்தை அணிந்துகொள்ளும் வழக்கம் உள்ளது, இவ்வாறு அணிந்து கொள்வது பணப்புழக்கத்தை தரும் என்று முதியவர்கள் சொல்வார்கள். அந்த முறையைவிட பல மடங்கு சக்திவாய்ந்தது பூனையின் தொப்புள் கொடி - தாந்த்ரீகம். நாம் வீட்டில் வளர்க்கும் பூனை கூட எங்கே குட்டியிடுகிறது என்பதை தெரிந்துகொள்ள முடியாது, வளர்ப்பவர்களுக்கே தெரியாதவாறு மறைந்து தான் பூனை குட்டியிடும், தாந்த்ரீகர்கள் பூனைகளை வசியம் செய்து அது குட்டியிடும் வேளை அறிந்து பூனையின் தொப்புள் கொடியை எடுப்பார்கள். பூனையின் தொப்புள் கொடி எடுப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை, பூனையின் தொப்புள் கொடி - கிடைக்கப்பெற்றவர் மிகப்பெரிய பாக்கியசாலி ஆவர். பூனையின் தொப்புள் கொடியை முறைப்படி சுத்தி செய்து, தாந்த்ரீக பூஜைகள் செய்து, வசிய உருவேற்றி செந்தூர பொடியில் வைத்து - ஒருவரின் கடை, அலுவலகம், தொழிற்ச்சாலை அல்லது வீட்டில் பணப்பெட்டியில் வைக்கும்போது அபரிமிதமான செல்வ வளத்தை நமக்கு உண்டாக்குகிறது. எதிரிகளிடம் இருந்தும் எதிரிகள் ஏவும் ஏவல், பில்லி, சூனியத்தில் இருந்தும் பாதுகாக்கிறது. பூனையின் தொப்புள் கொடி வைத்து இருப்பவரின் அனைத்து ஆசைகளையும் அது நிறைவேற்றும்.

ஞாயிறு, 28 ஜூலை, 2024

சியர் சிங்கி அல்லது கிதார் சிங்கி

                                    

சியார்(SIYAR) அல்லது கிடார் (GIDAR) என்றால் குள்ளநரி (JACKAL) என்றும் சிங்கி என்றால் கொம்பு (HORN) என்றும் பொருள். சியர் சிங்கி அல்லது கிதார் சிங்கி என்றால் குள்ளநரியின் கொம்பு என்று பொருள். இது குள்ளநரி  நெற்றியில் காணப்படும் கொம்புடன் கூடிய கூந்தல். இது அபரிமிதமான சக்தியைக் கொண்டுள்ளது மற்றும் தாந்த்ரீக யோகா மற்றும் பல வேத சடங்குகளில் இது மிகவும் அவசியம்.  இந்த சியார் சிங்கியை வைத்திருப்பவர் தனக்கு வரும் அனைத்து பிரச்சனைகளில் இருந்து வெற்றி பெறுகிறார், மற்றும் ஏவல், பில்லி, சூனியம் மற்றும் கண்திருஷ்டி போன்ற அனைத்து எதிர்மறையான விஷயங்களில் இருந்து பாதுகாக்கப்படுகிறார், சியார் சிங்கி இருக்கும் இடத்தில் எதிர்மறை ஆற்றல்கள் நெருங்கவே நெருங்காது. இது சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவுகளில் கிடைக்கிறது, சியார் சிங்கி மிகவும் அரிதான மற்றும் விலையுயர்ந்த பொருளாகும். சியார் சிங்கி வாங்குபவர் அதனை வாங்குவதற்கு முன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பல மோசடி விற்பனையாளர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் பல வாடிக்கையாளர்களை ஏமாற்றுகின்றனர். எனவே, உண்மையான சியர் சிங்கி தானா என்பதனை  சரிபார்த்து வாங்குவது மிகவும் முக்கியமானது.

குள்ளநரிகள் பொதுவாக மலைப்பாங்கான பகுதிகளில் காணப்படும். பொதுவாக, சிறிய வயதில் கொம்பு இருக்காது, ஆனால் சியார் சிங்கி குள்ளநரிகள் வளரவளர கொம்பு முடி வழியாக வெளியே வரும். இது அற்புதமான மகத்தான மற்றும் விசித்திரமான சக்தியைக் கொண்டுள்ளது, சியார் சிங்கி தன வசியம், ஜன வசியம், தொழில் வசியத்தை உண்டாக்கும். சியர் சிங்கி ஏவல், பில்லி, சூன்யம் மற்றும் தீமையானா கண்திருஷ்டியில் இருந்து  பாதுகாப்பு அளிக்கிறது. சியார் சிங்கி வைத்திருப்பவர்களுக்கு சொத்து சேர்ந்துகொண்டே இருக்கும் . சியார் சிங்கி முறைப்படி சுத்தி செய்து முறையான வசிய மந்திர உருவேற்றி பின் வெள்ளிப் பெட்டியில் செந்தூர பொடியில் வைக்கப்பட்டுகிறது. பின்னர் அந்த வெள்ளிப் பெட்டி உங்களின் பணப்பெட்டி, பீரோ அல்லது பூஜை அறையில் வைக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்தில் முடி தானாகவே வளரும். பல வணிகர்கள் அதை லாக்கர் மற்றும் பணப்பெட்டியில் வைத்திருப்பார்கள், ஏனெனில் இது மிகப்பெரிய செல்வத்தை உருவாக்குகிறது.

பழங்காலத்திலிருந்தே, கிடார் சிங்கி அல்லது சியார் சிங்கி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக தாந்த்ரீக பரிகாரங்களில் மக்களால் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மக்கள் தங்கள் வீட்டில் இருந்து பேய், பிசாசு, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் எதிர்மறையை தடுக்க பயன்படுத்தப்படுகிறது. சியார் சிங்கி கோர்ட், கேஸ், வழக்குகளில் வெற்றி அளிக்கிறது, சொத்து குவிப்பு, போட்டி தேர்வுகளில் வெற்றி மற்றும் அதிகாரங்களைப் பெறுவதில் சாதகமான முடிவுகளை அளிக்கிறது. வெள்ளியால் ஆன பெட்டியில் செந்தூர பொடியில் வைக்க வேண்டும். அதை லாக்கர்களில் வைப்பதும் விசித்திரமான ஆனால் நேர்மறையான விளைவுகளைத் தருகிறது. பல தாந்த்ரீக பரிகாரங்களில் சியார் சிங்கி  இன்றியமையாததாக விளங்குகிறது. சியார் சிங்கி வசியம்  மற்றும்  திருமண பாக்கியம், அதிர்ஷ்டம், கடன்கள், உடல்நலம் மற்றும் பிற துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் தொடர்பான பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது. வேத விஞ்ஞானம் அதன் சக்தி மற்றும் மர்மமான குணப்படுத்தும் திறன்களைக் குறிப்பிட்டுள்ளது.




செவ்வாய், 23 ஜூலை, 2024

கண்திருஷ்டியால் உண்டான உடல்நல கோளாறு நீங்க


 கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியத்தால் உண்டாகும் உடல் நல குறைவு நீங்க....



முச்சந்தி மண், ஒன்பது காய்ந்த மிளகாய், ஒரு கைப்பிடி உப்பு, கொஞ்சம் கடுகு - கொட்டாங்குச்சி அல்லது இரும்பு பாத்திரத்தில் போட்டு - உடல் நலம் குன்றிவரை கிழக்கு பார்த்து அமரவைத்து, அந்த கொட்டாங்குச்சியை வலமாக மூன்று முறை சுற்றி "கண்பட்ட திருஷ்டிகள் கடுகு போல் வெடிக்கட்டும்" என்று சொல்லி கடவுளை வேண்டி, கரி அடுப்பு பற்றவைத்து அந்த தனலில் போட வேண்டும். கைகால் சுத்தம் செய்த பிறகு அல்லது குளித்து தானும் விபூதி பூசி, உடல் நலம் குன்றியவர்க்கும் விபூதி பூசி விட்டால் உடலில் தோன்றிய பாதிப்பு நீங்கும்.


ஜீவநாடி என்றால் என்ன?

  ஜீவநாடி என்றால் என்ன? “ஆதி என்னும் அசுதினாபுரம் கேளப்பா சொல்லுவேன் இப்பாரதத்து பெருநகர் ஆங்கென் ஒளர் விரிசலும் காலவழி தன்னிலே குறுக்கிடலும...