சனி, 3 ஆகஸ்ட், 2024

பூனையின் தொப்புள் கொடி - தாந்த்ரீகம்

                                           பூனையின் தொப்புள் கொடி - தாந்த்ரீகம்  



ஹிந்தி மொழியில் பில்லி கா ஜெர் (பூனையின் தொப்புள் கொடி) என்றும் ஆங்கிலத்தில் CAT'S CHORD (பூனையின் தொப்புள் கொடி) என்றும் அழைக்கப்படுகிறது.ஹிந்தியில் பில்லி என்றால் பூனை என்று பொருள். பூனை குட்டி போடும் போது தொப்புள்கொடியுடன் ஒரு பை போன்று இருக்கும் அந்த பை உள்ளே தான் முதல் குட்டி இருக்கும் (பூனையின் தொப்புள் கொடி), பூனை பல குட்டிகளை இடும் ஆனால் ஒரேயொரு தொப்புள் கொடியுடன் பை ஒன்று மட்டுமே இருக்கும். "தாத்ரேய தந்திரம்" என்னும் தாந்த்ரீக சாஸ்திரத்தில் பூனையின் தொப்புள் கொடி தாந்த்ரீகத்தின் அற்புதங்களை பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. நமது தமிழ் மக்களிடம் கூட தலைச்சான் குழந்தையின் தொப்புள்கொடி எடுத்து தாயத்தில் அடைத்து தந்தை அணிந்துகொள்ளும் வழக்கம் உள்ளது, இவ்வாறு அணிந்து கொள்வது பணப்புழக்கத்தை தரும் என்று முதியவர்கள் சொல்வார்கள். அந்த முறையைவிட பல மடங்கு சக்திவாய்ந்தது பூனையின் தொப்புள் கொடி - தாந்த்ரீகம். நாம் வீட்டில் வளர்க்கும் பூனை கூட எங்கே குட்டியிடுகிறது என்பதை தெரிந்துகொள்ள முடியாது, வளர்ப்பவர்களுக்கே தெரியாதவாறு மறைந்து தான் பூனை குட்டியிடும், தாந்த்ரீகர்கள் பூனைகளை வசியம் செய்து அது குட்டியிடும் வேளை அறிந்து பூனையின் தொப்புள் கொடியை எடுப்பார்கள். பூனையின் தொப்புள் கொடி எடுப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை, பூனையின் தொப்புள் கொடி - கிடைக்கப்பெற்றவர் மிகப்பெரிய பாக்கியசாலி ஆவர். பூனையின் தொப்புள் கொடியை முறைப்படி சுத்தி செய்து, தாந்த்ரீக பூஜைகள் செய்து, வசிய உருவேற்றி செந்தூர பொடியில் வைத்து - ஒருவரின் கடை, அலுவலகம், தொழிற்ச்சாலை அல்லது வீட்டில் பணப்பெட்டியில் வைக்கும்போது அபரிமிதமான செல்வ வளத்தை நமக்கு உண்டாக்குகிறது. எதிரிகளிடம் இருந்தும் எதிரிகள் ஏவும் ஏவல், பில்லி, சூனியத்தில் இருந்தும் பாதுகாக்கிறது. பூனையின் தொப்புள் கொடி வைத்து இருப்பவரின் அனைத்து ஆசைகளையும் அது நிறைவேற்றும்.

பூனையின் தொப்புள் கொடி - தாந்த்ரீகம்

                                           பூனையின் தொப்புள் கொடி - தாந்த்ரீகம்   ஹிந்தி மொழியில் பில்லி கா ஜெர் (பூனையின் தொப்புள் கொடி) என...